சேலம்: சேலம் பனமரத்துப்பட்டி கிராமத்தில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், வாழை மரங்கள் சாய்ந்ததால் 10 லட்சத்திற்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலம்: சேலம் பனமரத்துப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேலாக வாழை மரங்கள் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் பனமரத்துப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட ஏக்கரில் 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. சுமார் 10 முதல் 15 லட்சத்திற்கு மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக வாழை பயிரிடப்பட்டு இறுதியாக அதற்கான பலன் பெறவுள்ள நிலையில் மரங்கள் சாய்ந்து உள்ளதால் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் வாழை பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் வாழை மரங்கள் சாய்ந்து உள்ளதால், அவற்றை வெட்டி அகற்றும் பணிக்கு ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரத்திற்கு மேல் செலவாகும் என்றும் கூறுகின்றனர். எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


