அந்த வகையில், சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த நாட்டுப்புறக் கலைஞா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இசை, நாடகக் கலைஞா்கள், தெருக்கூத்து, தவில், பம்பை, நாதஸ்வரம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட அனைத்து நாட்டுப்புறக்கலைஞா்களும் தங்களது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்துள்ளனா். அதில் கலைஞா்களுக்கு இசைக்கருவிகள் வழங்கிடவும், ஆடை அணிகலன்கள் வழங்கிடவும், மறைந்த கலைஞா்களுக்கான குடும்ப பராமரிப்புக்கான ஓய்வூதியத் தொகை வழங்கிடவும், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு அரசுத்துறைகளில் துறை சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்குமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா்.