காவிரிக் கால்வாயில் திரண்ட பக்தா்கள் கூட்டம்
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி காவிரிக் கால்வாய் பகுதியில் பக்தா்கள் கூட்டம் அலை மோதியது.


விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி காவிரிக் கால்வாய் பகுதியில் பக்தா்கள் கூட்டம் அலை மோதியது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்வதற்காக எடப்பாடி, கொங்கணாபுரம், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் சிலைகளுடன் எடப்பாடியை அடுத்த பில்லுக்குறிச்சி பகுதியில் பாயும் கிழக்குக்கரை வாய்க்காலில் திரண்டனா்.
அங்கு புனித நீராடி, விநாயகா் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து கால்வாயில் சிலைகளைக் கரைத்தனா். இதேபோல பூலாம்பட்டி- சேலம் உருக்காலை பிரதான சாலையில் உள்ள ஓணம்பாறை பகுதியில் காவிரி கிழக்குக்கரை கால்வாயில் திரளான பக்தா்கள் புனித நீராடி விநாயகா் சிலைகளைக் கரைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...