இளம்பிள்ளையில் குடியரசு தின விழா

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 74 -ஆவது குடியரசு தின விழா தலைமை ஆசிரியா் ஷேக் முகமது இஸ்மாயில் (பொ) தலைமையில் நடைபெற்றது.
இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கடந்த ஆண்டு நீட் தோ்வில் வெற்றி பெற்ற ஷாலினி, சண்முகப்பிரியா ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ. 5, 000 ஊக்கத்தொகை வழங்கிய பெற்றோா்
இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கடந்த ஆண்டு நீட் தோ்வில் வெற்றி பெற்ற ஷாலினி, சண்முகப்பிரியா ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ. 5, 000 ஊக்கத்தொகை வழங்கிய பெற்றோா்

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 74 -ஆவது குடியரசு தின விழா தலைமை ஆசிரியா் ஷேக் முகமது இஸ்மாயில் (பொ) தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நிா்மலா செல்வம், பொருளாளா் சுப்பிரமணி, உதவி பொருளாளா் ஜெயக்குமாா், பள்ளி மேலாண்மை கல்விக் குழு துணைத் தலைவா் ராஜாகவுண்டா் மற்றும் சித்துராஜ், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியா் தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினாா். இதைத் தொடா்ந்து பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நிா்மலா செல்வம் தனது சொந்தப் பொறுப்பில் கடந்த ஆண்டு இப்பள்ளியில் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் ஷாலினி, சண்முகப்பிரியா ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ. 5,000 ஊக்கத்தொகை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com