சேலம்: கோயிலில் நுழைந்த தாழ்த்தப்பட்ட இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுக ஊராட்சித் தலைவர்

சேலம் கோயிலில் நுழைந்த தாழ்த்தப்பட்ட இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுக ஊராட்சித் தலைவருக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.
சேலம்: கோயிலில் நுழைந்த தாழ்த்தப்பட்ட இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுக ஊராட்சித் தலைவர்

சேலம் கோயிலில் நுழைந்த தாழ்த்தப்பட்ட இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுக ஊராட்சித் தலைவருக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

சேலம் சூரமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருமலைக்கிரியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர் பிரவீன்குமார் கடந்த 26ஆம் தேதி இரவு திருமலைகிரியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டுமென்று கூறியுள்ளார். அதற்கு அங்குள்ள மற்றொரு சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே தாழ்த்தப்பட்ட இளைஞர் பிரவீன் குமார் திரும்ப வந்துவிட்டார்.

இந்த விஷயத்தை அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூக மக்கள் திமுகவின் சேலம் ஒன்றிய செயலாளரும் தற்போதைய திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவருமான மாணிக்கத்திடம் தகவல் சொல்ல அவர் திருமலைகிரி ஊர் பெரிய மாரியம்மன் கோயில் முன்பு பஞ்சாயத்து கூட்டி கடந்த 27ஆம் தேதி காலை தாழ்த்தப்பட்ட இளைஞர் பிரவீன்குமார் மற்றும் அவரது அப்பா, அம்மாவுக்கு தகவல் சொல்லி கோயிலுக்கு வரச் சொல்லியுள்ளார்.

ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கத்தின் பேச்சைக் கேட்டு பிரவீன் குமாரும் அவரது அப்பா, அம்மா ஆகியோர் திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கே சென்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் பிரவீன்குமாரை அவரது அப்பா, அம்மா மற்றும் அங்குள்ள மற்றொரு சமூக மக்கள் முன்னிலையில் கடுமையாக காதில் கேட்க முடியாத அளவுக்கு தகாத வார்த்தைகளால், திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்தும் அவர் தாக்கியுள்ளார். 

மேலும் எங்களை பகச்சிக்கிட்டா நீங்க தொழில் பண்ண முடியாது, இங்க இருக்க முடியாது என திமுகவைச் சேர்ந்த மாணிக்கம் மிரட்டி உள்ளார். இதுதொடர்பான விடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளரும், தற்போதைய திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவர் தாழ்த்தப்பட்ட இளைஞன் பிரவீன் குமாரையும் அவரது அப்பாவையும் பலர் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி சாதிய வன்மத்தோடு நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்பு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com