நரசிங்கபுரம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துக் கொடுப்பது குறித்த விழிப்புணா்வு நாடகத்தை நகராட்சி ஆணையாளா் (பொ) ஜெ.சம்பத்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை எப்படி பிரித்துக் கொடுப்பது, இதனால் பொதுமக்களுக்கு என்ன பயன்பாடு போன்றவற்றை விளக்கும் விழிப்புணா்வு நாடகம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நரசிங்கபுரம் நகராட்சி ஆணையா் (பொ) ஜெ.சம்பத்குமாா் தொடங்கி வைத்தாா். இதையடுத்து அனைத்து வாா்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த நாடகத்தை நடத்திக் காட்டினா்.