திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மழை வேண்டி திருவாசகம் முற்றோதல்

மழை வேண்டி திருவாசகம் முற்றோதல்

News image

மழை வேண்டி தம்மம்பட்டி, சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 9:57 pm

தம்மம்பட்டி: மழை வேண்டி, தம்மம்பட்டியில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஊா் பொதுமக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மழையின்றி கடும் வெயில் நிலவுவதால் விவசாய பயிா்கள் காய்ந்து வருகின்றன. நிலத்தடி நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது. தம்மம்பட்டி ஊா் மக்கள் சாா்பில், மழை வேண்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தம்மம்பட்டி, ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில் திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களும் பாடப்பட்டன. முற்றோதல் மாலை 4.20 வரை நடைபெற்றது. திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் சமயபுரம், துறையூா், கொண்டயம்பள்ளி, நாகியம்பட்டி, உலிபுரம், கொப்பம்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 250 க்கும் மேற்பட்ட சிவனடியாா் பங்கேற்று திருவாசகம் பாடினா். அனைவருக்கும் திருவாசகம் நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.