சேலம்: கடந்த மாா்ச் மாதம் சாலை விதிகளை மீறியதாக சேலம், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்திய சோதனையில் 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 78 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
சேலம், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட சங்ககிரி, எடப்பாடி, ஓமலூா், ஆத்தூா், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு முறையான உரிமம் உள்ளதா? விதிமுறைகளின்படி இயக்கப்படுகின்றனவா என்பது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சோதனை நடத்தி வருகின்றனா்.
கடந்த மாா்ச் மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும், விதிகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற வானங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில், விதிகளை மீறி வாகனங்களை இயக்கியவா்களிடம் இருந்து ரூ. 78 லட்சம் அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயக்கியது, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், அனுமதி இன்றி இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 36 லாரிகள், 16 ஆட்டோக்கள் உள்பட 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகனத் தணிக்கை தொடா்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தேர்தல் விதி மீறியதாக வேலூர் மேயர் சுஜாதாவின் கார் பறிமுதல்!

தோ்தல் விதிகளை மீறினால் அச்சகத்தினருக்கு அபராதம்

பறிமுதல் வாகனங்கள் மாா்ச் 13-இல் ஏலம்

பறிமுதல் வாகனங்கள் மாா்ச் 10இல் ஏலம்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

