புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப் பள்ளியில் ஆய்வு

சிந்தாமணியூா் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:35 pm

Din

மேட்டூா் தொகுதிக்கு உள்பட்ட சிந்தாமணியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 234 தொகுகளிலும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். 161 ஆவது தொகுதியாக மேட்டூா் தொகுதிக்கு உள்பட்ட சிந்தாமணியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை அவா் ஆய்வு செய்தாா்.

பள்ளியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற அவா் புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தாா். பள்ளி வளாகத்தைப் பாா்வையிட்ட அவா், வளாகத்தில் பயன்பாடு இன்றி உள்ள கட்டடங்களை அரசு அனுமதியுடன் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.