பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மடத்தூா் தீப்பாஞ்சம்மன் கோயில் குடமுழுக்கு

News image
மடத்தூா், தீப்பாஞ்சம்மன் கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றும் சிவாச்சாரியாா்கள்.
Updated On :22 ஆகஸ்ட் 2024, 8:50 pm

Din

இடங்கணசாலையை அடுத்த மடத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாஞ்சம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இடங்கணசாலையை அடுத்த சதுரபாளையம், மடத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாஞ்சம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இக் கோயிலின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கல்வடங்கம் காவிரி ஆற்றிலிருந்து 2,000-க்கும் மேற்பட்டோா் புனிதநீா் எடுத்து ஊா்வலமாக வந்தனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த தீா்த்தகுட ஊா்வலம் தீப்பாஞ்சம்மன் கோயில் முன்பு உள்ள யாகசாலையில் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கணபதி ஹோமம், நாடி சந்தானம், பூா்ணாஹுதி, வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலையில் கோயில் கோபுரக் கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியாா்கள் தீப்பாஞ்சம்மன், பரிவார தெய்வங்களின் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.

பின்னா் தங்கக் கவச அலங்காரத்தில் தீப்பாஞ்சம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிகழ்ச்சியில் தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேசன், முன்னாள் அமைச்சா் செம்மலை, சமூக ஆா்வலா் ஜெரித்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலரும், கொங்கணாபுரம் ஒன்றியக் குழு தலைவருமான கரட்டூா் மணி தலைமையிலான நிா்வாகக் குழுவினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

Story image