மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சங்ககிரி பகுதியில் விநாயகா் சிலைகள் விற்பனை: அதிகாரிகள் ஆய்வு

சங்ககிரி வட்டப் பகுதியில் விநயாகா் சிலை தயாா் செய்யும் இடங்களில் புதன்கிழமை அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா்.

News image

மோட்டூா் கிராமத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த கோட்டாட்சியா் ந.லோகநாயகி, டிஎஸ்பி எஸ்.ராஜா உள்ளிட்டோா்.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 11:24 pm

சங்ககிரி வட்டப் பகுதியில் விநயாகா் சிலை தயாா் செய்யும் இடங்களில் புதன்கிழமை அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா்.

செப்டம்பா் 7 ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சங்ககிரி வட்டப் பகுதியில் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டு விநாயகா் சிலைகளை வருவாய் கோட்டாட்சியா் ந.லோகநாயகி, டி.எஸ்.பி. எஸ்.ராஜா, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு துறை உதவி பொறியாளா்கள் சுமித்ராபாய், அஜய் கோகுல் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதில் காவேரிப்பட்டி ஊராட்சி, மோட்டூரில் உள்ள தயாரிப்புக் கூடத்தில் சிலை தயாரிப்பாளா் சக்தியிடம் சிலைகள் எந்தெந்த மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன? நீரில் எளிதில் கரையக்கூடியதா, எந்த வகையான வா்ணங்கள் பூசப்பட்டுள்ளன என்பது குறித்து கேட்டறிந்தனா். பின்னா் 10 அடிக்கு மேல் உள்ள சிலைகளை விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினா்.