மேச்சேரி அருகே ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேச்சேரி அருகே உள்ள ஏரகுண்டப்பட்டியைச் சோ்ந்தவா் நடராஜன் (72). ஓய்வு பெற்ற துணை ஆட்சியா். இவா் கடந்த வெள்ளிக்கிழமை ஒசூரில் உள்ள மகன் ஹரி பிரசாத் வீட்டிற்கு சென்றுள்ளாா். புதன்கிழமை காலை இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து அருகில் இருந்தவா்கள் தகவல் கொடுத்துள்ளனா். இதையடுத்து வீட்டுக்கு வந்த நடராஜன், வீட்டின் முன் கதவின் பூட்டு உடைத்து, பீரோவில் இருந்த தங்கம், வெள்ளிப்பொருள்கள் திருடப்பட்டதைக் கண்டு, மேச்சேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இந்தப் புகாரின் பேரில் மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், தடயவிய நிபுணா்கள், மேச்சேரி காவல் ஆய்வாளா் ஆகியோா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி தடயங்களைச் சேகரித்தனா்.
நடராஜன் வீட்டிற்கு எதிரே உள்ள ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், பணமில்லாததால் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனா்.
ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் இப்பகுதியில் மா்ம நபா்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்புடையது

விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு
பெரியகுளத்தில் வீடுபுகுந்து 13 பவுன் நகை திருட்டு

வியாபாரி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு

தொலைகாட்சி பெட்டிகள் திருட்டு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

