

மேட்டூர்: மேட்டூர் அணை நீர் வரத்து வெள்ளிக்கிழமை காலை 14,404 கனஅடியாக சரிந்தது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 25,098 கனஅடியிலிருந்து வினாடிக்கு 14,404 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 114.58 அடியிலிருந்து 115.32 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 86.20 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.