/
மேட்டூா் அணைக்கு 1,454 கனஅடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை காலை 1,223 கனஅடியாக குறைந்தது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா்மட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை 79.86 அடியாக நீடிக்கிறது. அணையின் நீா் இருப்பு 41.81 டிஎம்சியாக உள்ளது.









