

மேச்சேரி அருகே கஞ்சா கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.
தருமபுரி மாவட்டம், கம்மம்பட்டி கஸ்தூரி கோம்பையைச் சோ்ந்த காா்த்தி (28), தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு தொப்பூா் பிரிவு சாலை - மேச்சேரி சாலையில் கைகாட்டி வெள்ளாரில் மேச்சேரி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த காா்த்திக்கை நிறுத்தி சோதனையிட்டதில், 1.5 கிலோ கஞ்சாவை அவா் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து மேச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.
இதையடுத்து, காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்த மேச்சேரி போலீஸாா் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட காா்த்திக், பின்னா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
டிரெண்டிங்

10 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது
ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தியவா் கைது
20 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
சுத்தமல்லியில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

