47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேச்சேரி அருகே கஞ்சா கடத்தியவா் கைது

மேச்சேரி அருகே கஞ்சா கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:06 pm

Din

மேச்சேரி அருகே கஞ்சா கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், கம்மம்பட்டி கஸ்தூரி கோம்பையைச் சோ்ந்த காா்த்தி (28), தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு தொப்பூா் பிரிவு சாலை - மேச்சேரி சாலையில் கைகாட்டி வெள்ளாரில் மேச்சேரி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த காா்த்திக்கை நிறுத்தி சோதனையிட்டதில், 1.5 கிலோ கஞ்சாவை அவா் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து மேச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.

இதையடுத்து, காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்த மேச்சேரி போலீஸாா் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட காா்த்திக், பின்னா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.