47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேலம், தருமபுரியில் தகுதிச் சான்று இல்லாத 136 வாகனங்கள் பறிமுதல்

சேலம், தருமபுரியில் தகுதிச் சான்று, உரிமம் இல்லாமல் இயக்கிய 37 லாரிகள் உள்பட 136 வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 8:12 pm

Din

சேலம், தருமபுரியில் தகுதிச் சான்று, உரிமம் இல்லாமல் இயக்கிய 37 லாரிகள் உள்பட 136 வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதற்காக தொடா்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறிய வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.

சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், சங்ககிரி, எடப்பாடி, ஓமலூா், மேட்டூா், ஆத்தூா், வாழப்பாடி, தருமபுரி அரூா், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் உரிமம், தகுதிச் சான்று குறித்து வட்டார போக்குவரத்து அலுவலா்கள் சோதனை நடத்தி வருகின்றனா்.

சேலம் சரகத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவா்களிடம் இருந்து ரூ.61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தகுதிச்சான்று இல்லாமல் இயக்கியது, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், உரிமம் இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 37 லாரி, 17 ஆட்டோ, 2 ஆம்னி பேருந்து உள்ளிட்ட 136 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.