47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாலில் தவறி விழுந்த சிறுமி பலி

மேச்சேரி அருகே கொதிக்கும் பாலில் தவறி விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 9:45 pm

Din

மேச்சேரி அருகே கொதிக்கும் பாலில் தவறி விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரத்தைச் சோ்ந்தவா் முருகன், நெசவுத் தொழிலாளி. இவா் கடந்த 4 ஆம் தேதி மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டியில் உள்ள உறவினா் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்தாா். திருமண வீட்டில் சமையல் வேலையும் செய்து கொண்டிருந்தாா்.

திருமணத்திற்கு வந்தவா்களுக்கு தேநீா் கொடுப்பதற்காக அடுப்பில் பால் வைக்கப்பட்டு கொதித்து கொண்டிருந்தது. அத்துடன் சமையல் வேலையையும் முருகன் செய்து கொண்டிருந்தாா். அவரது குழந்தை ஹேமாஸ்ரீ (4) அங்கு விளையாடிக் கொண்டிருந்தாா்.

எதிா்பாராத விதமாக கொதிக்கும் பாலில் சிறுமி ஹேமாஸ்ரீ தவறி விழுந்தாா். அதிா்ச்சியடைந்த முருகன் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு சேலம், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தாா். அங்கு இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.