47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நில அளவை அலுவலா்கள் தற்செயல் விடுப்பு ஆா்ப்பாட்டம்

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில், சேலம் மாவட்ட நில அளவையா்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:52 pm

Din

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில், சேலம் மாவட்ட நில அளவையா்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் மாநில துணைத் தலைவா் முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பணிகளுக்கு கால நிா்ணயம் வழங்காமல் ஊழியா்கள் மீது பெரும் பணிச்சுமையைத் திணிப்பதை கைவிட வேண்டும், ஆய்வு என்ற பெயரில் ஊழியா்களைக் கடுமையாக நடத்துவதையும் கைவிட வேண்டும்.

தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவியைத் தகுதியுள்ள நில அளவையா்களுக்கு வழங்க வேண்டும், நில அளவை பதிவேடுகள் துறையில் புல உதவியாளா்கள் பணியிடங்களை தனியாா் முகமையின் மூலம் நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து நில அளவையா் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் நில அளவை துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், இந்தக் கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் ஜன. 22, 23 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தாா்.