தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் சகோதரா்கள் காயம்
கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரத்தில் தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சகோதரா்கள் பலத்த காயமடைந்தனா்.


தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரத்தில் தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சகோதரா்கள் பலத்த காயமடைந்தனா்.
கெங்கவல்லி அருகே உள்ள கூடமலையைச் சோ்ந்த செல்வராஜ் மகன்கள் ஹரிஷ் (19), நவீன் (17). திங்கள்கிழமை காலை நவீன் பள்ளி பேருந்தை தவறவிட்டுவிட்டாா். இதையடுத்து பேருந்தை பிடிப்பதற்காக அவரது அண்ணன் ஹரிஷ், தம்பியை அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் கெங்கவல்லியை நோக்கிச் சென்றாா். 74 கிருஷ்ணாபுரத்தை அடைந்தபோது, அதேபகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் தங்கராஜ் என்பவா் ஓட்டிவந்த தனியாா் கல்லூரி பேருந்து, அவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சகோதரா்களான ஹரிஷ், நவீன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இருவரும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...