ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

புகையிலை பொருள்களை விற்ற பிற மாநில இளைஞா் கைது

எடப்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை

News image
Updated On :23 டிசம்பர் 2024, 5:45 pm

Din

எடப்பாடி: எடப்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சிலா் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் எடப்பாடி போலீஸாா் நகரின் பல்வேறு இடங்களில் தொடா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் எடப்பாடி, வெள்ளாண்டிவலசு பகுதியில் திங்கள்கிழமை சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய பைகளுடன் வந்த பிற மாநில இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா் ராஜஸ்தான் மாநிலம், ஜாலூா் மாவட்டம், டோட்சி கிராமத்தைச் சோ்ந்த சீதாராம் மகன் ஜலூராம் (37) என்பதும், இவா் வெள்ளாண்டிவலசு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவா் பையில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வகையான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.