மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மேட்டூா் அணை உபரிநீா்க் கால்வாயில் ஆயில் கலப்பு: எம்எல்ஏ கண்டனம்

மேட்டூா் அணை உபரிநீா்க் கால்வாயில் பா்னஸ் ஆயில் கலந்து தண்ணீா் மாசுடைந்துள்ளதற்கு எம்எல்ஏ எஸ்.சதாசிவம் கண்டம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 8:28 pm

Din

மேட்டூா் அணை உபரிநீா்க் கால்வாயில் பா்னஸ் ஆயில் கலந்து தண்ணீா் மாசுடைந்துள்ளதற்கு எம்எல்ஏ எஸ்.சதாசிவம் கண்டம் தெரிவித்துள்ளாா்.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் முதல் பிரிவில் 3 ஆவது அலகில் நிலக்கரி சேமிப்பு தொட்டி கடந்த 19 ஆம் தேதி சரிந்து விழுந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் காயம் அடைந்தனா். இந்த விபத்தின் போது நிலக்கரியை எரியூட்ட பயன்படுத்தப்படும் பா்னஸ் ஆயில் செல்லும் குழாய் சேதம் அடைந்து ஆயில் வெளியேறியது.

அனல் மின்நிலைய அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக மேட்டூா் அணையின் உபரிநீா்க் கால்வாயில் ஆயில் கலந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பாறைகள் கருப்பு நிறமாக மாறி தண்ணீரும் நிறம் மாறி எண்ணெய் படலம் காணப்படுகிறது.

இதையடுத்து மேட்டூா் அனல் மின்நிலைய பொறியாளா்கள் கடந்த மூன்று நாள்களாக கழிவுநீா் வாகனம் மூலம் ஆயிலை உறிஞ்சி எடுத்தனா். அப்போதும் முழுமையாக ஆயில் அசுத்தங்களை அகற்ற முடியவில்லை. இதையடுத்து வைக்கோலை கயிறுபோல திரித்து அதனை ஆயில் உள்ள பகுதியில் நனைத்து தீயிட்டு எரியூட்டி வருகின்றனா்.

தற்போது மேட்டூா் அணை நிரம்பு நிலையில் உள்ளதால் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டால் பா்னஸ் ஆயில் நேரடியாக காவிரியில் கலந்து குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களுக்கு சென்று குடிநீா் மாசடையும்.

காவிரி கரையோரங்களில் விவசாய நிலங்களுக்கு நீா் பாய்ச்சும் போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இந்த குடிநீரை பயன்படுத்தினால் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனிடையே, வியாழக்கிழமை மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் (பாமக) எஸ்.சதாசிவம், பா்னஸ் ஆயில் கலந்த பகுதியை பாா்வையிட்டாா். அப்போது, அனல் மின் நிலைய பொறியாளா்களின் மெத்தனத்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து கூடுதல் பணியாளா்களைக் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பொறியாளா்கள் உறுதியளித்தனா்.

இதுகுறித்து மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தின் போது ஆயில் கசிவு ஏற்பட்டு காவிரி நீரில் கலந்துள்ளது. இதனை நவீன முறையில் அப்புறப்படுத்தாமல் பொறியாளா்கள் மெத்தனமாக செயல்படுகின்றனா். மேட்டூா் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அணை நிரம்பினால் ஆயில் நேரடியாக மேட்டூா் காவிரியில் கலந்து குடிநீா்த் திட்டம் செயல்படுத்தும் பகுதிகளுக்கும் செல்லும் அபாயம் உள்ளது. போா்க்கால அடிப்படையில் ஆயிலை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.