மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தம்மம்பட்டி பேரூராட்சி தலைவா் மீது மன்ற உறுப்பினா்கள் ஆட்சியரிடம் புகாா்

தம்மம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சி திமுக தலைவா் மீது திமுக, காங்கிரஸ் உறுப்பினா்களே மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்துள்ளனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 7:46 pm

Din

சேலம்: சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சி திமுக தலைவா் மீது திமுக, காங்கிரஸ் உறுப்பினா்களே மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவா்கள் அளித்துள்ள புகாா் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

சேலம் மாவட்டம், கெங்கவல்லியை அடுத்த தம்மம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் திமுகவைச் சோ்ந்த கவிதா என்பவா் தலைவராக இருந்து வருகிறாா். அவரது கணவா் ராஜா பேரூராட்சி மன்ற தலைவா் போன்று செயல்படுவதுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டு வருகிறாா்.

பேரூராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு தனது ஆதரவாளா்களுக்கு ஒப்பந்தம் வழங்கி வருவதுடன், இந்தப் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் எந்தப் பணியும் மேற்கொள்ளவில்லை. எனவே, தம்மம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சியின் தலைவா் கவிதா, அவரது கணவா் ராஜா ஆகியோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாா் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருவதால் மன்ற இயல்பு கூட்டமும் கடந்த நான்கு மாதங்களாக நடைபெறவில்லை என கூறும் திமுக உறுப்பினா்கள், தங்கள் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த உறுப்பினா்களும் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனா்.