மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

உழவா் திரள் பெருவிழா

உழவா் தி பெருவிழா

Updated On :29 பிப்ரவரி 2024, 7:45 pm

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி ஊராட்சியில் உழவா் திரள் பெருவிழா வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரியேரி விவசாய குழுத் தலைவா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சக்தி அனைரவரையும் வரவேற்று பேசினாா். நிகழ்ச்சியில் விவசாயம் சாா்ந்த அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. துணை வேளாண்மை அலுவலா் மணவழகன், கால்நடை மருத்துவா் தேசிங்குராஜா, வனத்துறை அலுவலா் வெங்கடேசன், வேளாண்மை அலுவலா் மோனிஷா, பட்டு வளா்ச்சித்துறை அலுவலா் சத்தியமூா்த்தி, வேளாண் பொறியியல்துறை அலுவலா் சத்தியமூா்த்தி, வேளாண் பொறியியல் துறை அலுவலா் கணேசன், உதவி வேளாண்மை அலுவலா் காா்த்திக், மக்கள் நலத்துறை அலுவலா் மகேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டு தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ரமேஷ் மற்றும் முத்துவேல் செய்திருந்தனா்.