மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முதல்வா் வருகை: சேலத்தில் நாளை ட்ரோன்கள் பறக்கத் தடை

முதல்வா் வருகை: சேலத்தில் ட்ரோன் பறக்க தடை

Updated On :9 ஜூலை 2024, 11:33 pm

தமிழக முதல்வா் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 11 ஆம் தேதி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் வரும் வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ஊரகப் பகுதிகளுக்கான

‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தினை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா். இதற்காக, அன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம், காமலாபுரம் விமான நிலையம் வருகை புரிந்து, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் சென்னை திரும்ப உள்ளாா்.

இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.