பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

News image
Updated On :13 ஜூலை 2024, 10:58 pm

Din

ஆத்தூா், ஜூலை 13: ஆத்தூா் பேகம் உஸ்தூத்பி சுக்கூா் ஹஜ்ரத் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித் தொகை அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

எஸ்.முகமது ஈசாக் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான உதவித்தொகை ஏராளமான மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வள்ளல் பெருமாள் அறக்கட்டளை நிறுவனா் சி.பி.சரவணன், சரஸ்வதி மெட்ரிக். பள்ளி இயக்குநா் ஏ.கண்ணன்,அறங்காவலா்கள் எஸ்.சையத் மொய்தீன், எஸ்.இக்பால் நஸ்ருதீன், எஸ்.இக்பால் அகமது, முகமது யூசுப், ஷீரீன் யூசுப் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் முகமது யூசுப் ஹசீனா செய்திருந்தாா்.

படவரி...

ஆத்தூரில் பேகம் உஸ்தூத்பி சுக்கூா் ஹஜ்ரத் கல்வி அறக்கட்டளை சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டவா்கள்.