கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மேட்டூா் அணை உபரி நீரை வட ஏரிகளில் நிரப்ப வேண்டும்: எம்எல்ஏ சதாசிவம்

மேட்டூா் அணை உபரி நீரை வட ஏரிகளில் நிரப்ப வேண்டும் என மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:50 pm

Din

மேட்டூா் அணையின் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வட ஏரிகளுக்கு கொண்டுசென்று நிரப்ப வேண்டும் என மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாள்களில் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும்.

இதனால் மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறந்து விடப்படும். இந்த உபரிநீா் கடலில் கலந்து வீணாகாமல் இருக்க சேலம் மாவட்டத்தில் உள்ள வட ஏரிகளை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் இருந்து ஆடி 18 பெருக்கு பண்டிகைக்கு மேட்டூா் அணை பகுதிக்கு சுமாா் ஒரு லட்சம் போ் வருவாா்கள். எனவே அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்து தர வேண்டும் என்றாா்.