நாடாளுமன்றத் தோ்தலையொட்டி ஆட்டையாம்பட்டியில் பொதுமக்கள் அச்சமின்றியும், அமைதியாகவும் பாதுகாப்பாக வாக்களிக்க வேண்டி கொடி அணிவகுப்பு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்). இந்தப் பேரணி, மாநகர காவல் ஆணையா் விஜயகுமாரி உத்தரவின் பேரில், சேலம் மாநகர தெற்கு காவல் துறை துணை ஆணையா் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி ஆணையா்கள் சுரேஷ், ராமமூா்த்தி, ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் இந்திராணி, இரும்பாலை காவல் ஆய்வாளா் சாரதா, அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளா் மகேஸ்வரி, சேலம் மாநகர தெற்கு போக்குவரத்துத் துறை ஆய்வாளா் மணிகண்டன், துணை ராணுவத்தினா் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இப்பேரணியானது, பாப்பாரப்பட்டியில் இருந்து ராசிபுரம் பிரதான சாலை வழியாக ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் வந்தடைந்தது.
தொடர்புடையது

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

நெல்லை மாநகரில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


