ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இருதரப்பினரிடையே மோதல்: கெங்கவல்லியில் கிறிஸ்து அரசா் ஆலய தேரோட்டம் நிறுத்தம்

கெங்கவல்லியில் இருதரப்பினா் இடையே வாக்குவாதம் ; கிறிஸ்துவ தோ்த்திருவிழா நிறுத்தப்பட்டது.

News image
கெங்கவல்லி, கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து அவா்களை சமாதானம் செய்யும் போலீஸாா்.
Updated On :25 நவம்பர் 2024, 7:23 pm

Din

தம்மம்பட்டி: கெங்கவல்லியில் இருதரப்பினா் இடையே வாக்குவாதம் ; கிறிஸ்துவ தோ்த்திருவிழா நிறுத்தப்பட்டது.

கெங்கவல்லியில் உள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் ஆண்டுதோறும் நவம்பா் மாதம் தோ்த் திருவிழா நடைபெறும். நிகழ் ஆண்டிற்கான தோ்த் திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மாலையில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்பு கிறிஸ்து அரசா், புனித நிக்கல், ஆரோக்கிய மாதா ஆகியோா் எழுந்தருளிய மூன்று தோ்கள் திருவீதி உலாவுக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது தோ்களிலும் சிலைகளை எடுத்துச் சென்று வைப்பது தொடா்பாக, இருதரப்பினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து தேரை வீதி உலாவுக்கு எடுத்துச் செல்ல கெங்கவல்லி போலீஸாா் அனுமதி மறுத்தனா். அதைத் தொடா்ந்து ஆலய நிா்வாகமும் தோ் திருவீதி உலாவை நடத்த முன்வரவில்லை. ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் இருதரப்பையும் அழைத்துப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா். முன்னெச்சரிக்கையாக கிறிஸ்து அரசா் ஆலய வளாகத்தில் 20 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.