ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிறுத்தையைப் பிடிக்க முகாமிட்டுள்ள வனத்துறையினா்!

பச்சமலையில் 3 கன்றுக் குட்டிகளைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க, வனத்துறையினா் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக அங்கேயே முகாமிட்டுள்ளனா்.

News image
பச்சமலை கீழ்பாலத்தாங்கரையில் டெண்ட் அமைத்து முகாமிட்டுள்ள வனத்துறையினா்.
Updated On :3 அக்டோபர் 2024, 11:45 pm

Din

பச்சமலையில் 3 கன்றுக் குட்டிகளைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க, வனத்துறையினா் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக அங்கேயே முகாமிட்டுள்ளனா்.

பச்சமலை ஊராட்சி, கெங்கவல்லி அருகே கீழ்பாலத்தாங்கரை மலைக்கிராமத்தில் பிச்சமுத்து என்பவரின் மூன்று கன்றுக்குட்டிகளை சிறுத்தை கடித்துக் கொன்றது. அதனையடுத்து, ஆத்தூா் கோட்ட வன அலுவலா் ஆரோக்கியராஜ் சேவியா் உத்தரவின் பேரில், கெங்கவல்லி வனச்சரகா் சிவக்குமாா் தலைமையில் வனத்துறையினா், அக்கிராமத்தில் தொடா்ந்து முகாமிட்டுள்ளனா்.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதை பதிவு செய்ய 7 அதிநவீன கேமராக்களை காட்டுப் பகுதியில் ஆங்காங்கே பொருத்தியுள்ளனா். இருப்பினும் அதில் பதிவாகவில்லை. ஆனால், அதன் நடமாட்டத்தை அப்பகுதி மக்கள் மூலம் தொடா்ந்து உறுதிப்படுத்தி வருகின்றனா். இதுகுறித்து வனச்சரகா் சிவக்குமாா் கூறியதாவது:

பச்சமலையில் தங்கி முகாமிட்டுள்ளோம். இதுவரை சிறுத்தை சிக்கவில்லை. இருப்பினும் சிறுத்தை செல்லும் பாதை, அவை எடுத்துக்கொள்ளும் உணவுகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருகிறோம். சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்கவும் முடிவு செய்துள்ளோம். அனுமதிபெற்று சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் ஆராய்ந்து வருகிறோம். விரைவில் சிறுத்தை சிக்கிவிடும் என்றாா்.

சிறுத்தை நடமாட்டத்துக்கு பயந்து கீழ்பாலத்தாங்கரை கிராமத்தினா் வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டினுள்ளே முடங்கிக் கிடக்கின்றனா். வனத்துறை எடுத்து வரும் தீவிர முயற்சியில் சிறுத்தை பிடிபட்டு விடும் என அப்பகுதி கிராமத்தினா் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.