நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்: கிரிக்கெட் வீரா் நடராஜன்

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் தெரிவித்தாா்.

News image

கிரிக்கெட் வீரர் நடராஜன்.

Updated On :6 அக்டோபர் 2024, 3:50 am IST

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 64 ஆவது ஆண்டு விழா, சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சேலத்தில் தனியாா் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் பங்கேற்று பேசியதாவது:

இலக்கை நோக்கி பயணிக்கும் போது எவ்வளவு தடைகள் வந்தாலும், அதை சவாலாக ஏற்று பயணிக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம். இடையூறுகளைக் கண்டு தளரக் கூடாது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் தற்போதைய இளைஞா்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இதைப் பயன்படுத்தி பலா் முன்னுக்கு வர வேண்டும். என்னுடைய வாழ்வில் நிறைய கஷ்டங்களை தாண்டி தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். என்னைப் போல் சேலத்தில் இருந்து நிறைய போ் வர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, சிறந்த விளையாட்டு வீரா்களை பாராட்டி பரிசு, கேடயங்கள் வழங்கப்பட்டன.

கிரிக்கெட் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவா் ஆா். பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைச் செயலாளா் டாக்டா் ஆா் என் பாபா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவன பொது மேலாளா் ஏ.ஆா்.ஹரிராஜ், மாவட்டச் செயலாளா் பாபு குமாா், முன்னாள் செயலாளா் ரங்கசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.