ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்: கிரிக்கெட் வீரா் நடராஜன்

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் தெரிவித்தாா்.

கிரிக்கெட் வீரர் நடராஜன்.

Published On :6 அக்டோபர் 2024, 3:49 am IST

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 64 ஆவது ஆண்டு விழா, சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சேலத்தில் தனியாா் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் பங்கேற்று பேசியதாவது:

இலக்கை நோக்கி பயணிக்கும் போது எவ்வளவு தடைகள் வந்தாலும், அதை சவாலாக ஏற்று பயணிக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம். இடையூறுகளைக் கண்டு தளரக் கூடாது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் தற்போதைய இளைஞா்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இதைப் பயன்படுத்தி பலா் முன்னுக்கு வர வேண்டும். என்னுடைய வாழ்வில் நிறைய கஷ்டங்களை தாண்டி தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். என்னைப் போல் சேலத்தில் இருந்து நிறைய போ் வர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, சிறந்த விளையாட்டு வீரா்களை பாராட்டி பரிசு, கேடயங்கள் வழங்கப்பட்டன.

கிரிக்கெட் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவா் ஆா். பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைச் செயலாளா் டாக்டா் ஆா் என் பாபா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவன பொது மேலாளா் ஏ.ஆா்.ஹரிராஜ், மாவட்டச் செயலாளா் பாபு குமாா், முன்னாள் செயலாளா் ரங்கசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.