வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்: கிரிக்கெட் வீரா் நடராஜன்

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் தெரிவித்தாா்.

News image

கிரிக்கெட் வீரர் நடராஜன்.

Updated On :5 அக்டோபர் 2024, 10:20 pm

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 64 ஆவது ஆண்டு விழா, சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சேலத்தில் தனியாா் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் பங்கேற்று பேசியதாவது:

இலக்கை நோக்கி பயணிக்கும் போது எவ்வளவு தடைகள் வந்தாலும், அதை சவாலாக ஏற்று பயணிக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம். இடையூறுகளைக் கண்டு தளரக் கூடாது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் தற்போதைய இளைஞா்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இதைப் பயன்படுத்தி பலா் முன்னுக்கு வர வேண்டும். என்னுடைய வாழ்வில் நிறைய கஷ்டங்களை தாண்டி தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். என்னைப் போல் சேலத்தில் இருந்து நிறைய போ் வர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, சிறந்த விளையாட்டு வீரா்களை பாராட்டி பரிசு, கேடயங்கள் வழங்கப்பட்டன.

கிரிக்கெட் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவா் ஆா். பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைச் செயலாளா் டாக்டா் ஆா் என் பாபா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவன பொது மேலாளா் ஏ.ஆா்.ஹரிராஜ், மாவட்டச் செயலாளா் பாபு குமாா், முன்னாள் செயலாளா் ரங்கசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.