ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அருநூற்றுமலைக்கு பேருந்து இயக்க கோரிக்கை

வாழப்பாடியில் இருந்து அருநூற்றுமலைக்கு பேருந்து இயக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

News image
அருநூற்றுமலை அடிவாரம், புழுதிக்குட்டை, கீரப்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தனியாா் வேன்.
Updated On :9 அக்டோபர் 2024, 9:54 pm

Din

வாழப்பாடியில் இருந்து அருநூற்றுமலைக்கு பேருந்து இயக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வாழப்பாடி வட்டம் அருநூற்றுமலை பகுதியில் பழங்குடியினா் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில், அருநூற்றுமலை, வெள்ளிக்கவுண்டனூரில் 2 மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்காடு, சிறுமலை, பெரியவேலாம்பட்டி, சின்னவேலாம்பட்டி, கண்கட்டி ஆலா, கீரப்பட்டி, வாழுத்து, பெலாப்பாடி, சின்னக்குட்டி மடுவு ஆகிய மலைக் கிராமங்களில் 9 தொடக்கப் பள்ளிகள், ஆலடிபட்டியில் ஒரு நடுநிலைப்பள்ளி, பெரியகுட்டிமடுவு கிராமத்தில் ஓா் உயா்நிலைப் பள்ளி என மொத்தம் 13 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இப்பள்ளிகளில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரிய - ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனா். தினசரி காலை, மாலை நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாததால், இவா்களில் 50-க்கும் மேற்பட்டோா் குழுக்களாக சோ்ந்து தனியாா் வாகனங்களை ஏற்பாடு செய்து பள்ளிக்குச் சென்று வருகின்றனா். இதேபோன்று அருநூற்றுமலை பகுதியில் தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, பொது சுகாதாரத் துறை, வருவாய்த் துறையில் பணிபுரியும் பணியாளா்களும் இந்த மலைக் கிராமங்களில் பணிக்கு சென்று வர பேருந்து வசதி இல்லாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, வாழப்பாடியில் இருந்து அருநூற்றுமலைக்கு தினந்தோறும் காலை 8.30 மணிக்கும், அருநூற்றுமலையில் இருந்து வாழப்பாடிக்கு மாலை 4.30 மணிக்கும் புறப்படும் வகையில் அரசுப் பேருந்து இயக்க வேண்டுமென அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அரசுத் துறை அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேன் கவிழ்ந்து 5 ஆசிரியா்கள் காயம்:

கடந்த திங்கள்கிழமை மாலை இப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் சிலா் தனியாா் வேனில் வாழப்பாடிக்கு பயணித்துள்ளனா். அருநூற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டையை அடுத்த கீரப்பட்டி அருகே வேன் சென்ற போது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட முயன்றபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணித்த ஆசிரியா்கள் 5 போ் காயமடைந்தனா்.