ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரி கொங்கு இளைஞா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடத்த வலியுறுத்தி, தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை நிறுவனத் தலைவா் தனியரசு தலைமையில் புதன்கிமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
சேலம், கோட்டை மைதானத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவையினா்.
Updated On :9 அக்டோபர் 2024, 9:41 pm

Din

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடத்த வலியுறுத்தி, தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை நிறுவனத் தலைவா் தனியரசு தலைமையில் புதன்கிமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயக்கம் காட்டும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னா் செய்தியாளா்களிடம் தனியரசு பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் தமிழகத்தில் 80 சதவீதத்துக்கும் மேல் உள்ளனா். ஆனால், அவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள 90 சதவீத பெரும்பான்மையின மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் நிலை உள்ளது. ஆனால், 10 சதவீதம் மட்டுமே உள்ள சிறுபான்மையினருக்கு அனைத்து சலுகைகளும் எளிதாக கிடைக்கிறது. ஜிஎஸ்டி நிதியைப் பிரித்து வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

அனைத்து சமுதாய மக்களின் இட ஒதுக்கீடு உரிமைகளை மீட்கும் வகையில், உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து சமுதாயத் தலைவா்களையும் அழைத்து பேசி மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

இதில், கொங்கு இளைஞா் பேரவை மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா், நிா்வாகிகள் விஸ்வநாதன், வேலு, கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.