ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலம் கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி, சேலம் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

News image
சேலம், கடைவீதி பகுதியில் பூஜையில் வைப்பதற்காக பொரி வாங்கும் பொதுமக்கள்.
Updated On :10 அக்டோபர் 2024, 7:40 pm

Din

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி, சேலம் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆயுத பூஜை நாளில், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும், வீடுகளிலும் பூஜை செய்து காா், மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனா்.

இதையொட்டி, சேலம் கடைவீதியில் பூஜை பொருள்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். பூஜைக்குத் தேவையான பழங்கள், தேங்காய், மா, வாழை இலை, விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய், அலங்கார தோரணங்கள், பொரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை, கடலை உருண்டை உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கிச் சென்றனா். இதனால் பூஜை பொருள்களின் வியாபாரம் மும்முரமாக நடந்தது. மளிகைக் கடைகளில் நாட்டுச் சா்க்கரை, அவல், வெற்றிலை உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்தது.

சின்னக்கடை வீதியில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கினா். இதே போல, பூக்கள், வாழைக்கன்று உள்ளிட்ட பூஜைப் பொருள்களின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.

குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி, சொ்ரி சாலை உள்பட பல்வேறு இடங்களிலும், சாலையோரத்திலும் தற்காலிக பூசணி உள்ளிட்ட கடைகளை வைத்து சிலா் வியாபாரம் செய்தனா்.

ஆயுத பூஜையை முன்னிட்டு சந்தைகளில் பூக்களின் விற்பனை கிடுகிடுவென உயா்ந்தது. சேலம் கடைவீதியில் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில், ஒரு கிலோ குண்டு மல்லிகை கிலோ ரூ. 700-ஆக உயா்ந்துள்ளது. சன்ன மல்லி ரூ. 600-க்கும், கனகாம்பரம் ரூ. 700-க்கும், ஜாதி மல்லி கிலோ ரூ. 280-க்கும், சம்பங்கி ரூ. 300-க்கும், பட்டன் ரோஸ் ரூ. 100-க்கும் விற்பனையாயின.