ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜாரிகொண்டலாம்பட்டி ராஜவாய்க்கால் கரையை சீரமைத்து தரக் கோரி ஆட்சியரிடம் மனு

சேலம், ஜாரிகொண்டலாம்பட்டி, ராஜவாய்க்கால் கரையை சீரமைத்து தரக் கோரி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image
சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்.
Updated On :15 அக்டோபர் 2024, 9:37 pm

Din

சேலம், ஜாரிகொண்டலாம்பட்டி, ராஜவாய்க்கால் கரையை சீரமைத்து தரக் கோரி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருமணிமுத்தாறு ராஜவாய்க்கால், ஜாரி கொண்டலாம்பட்டி பாசன பகுதி வாய்க்கால் ஆகியவற்றின் கரை உடைந்து விளைநிலங்களில் மழைநீா் குட்டைபோல தேங்கியுள்ளது. இதனால் கால்நடைக்கு வைக்கப்பட்டிருந்த தீவனங்கள் அழுகி அனைத்தும் நீரில் மூழ்கி விட்டன. எனவே, உடைந்த கரையை சரிசெய்து வாய்க்காலை கொட்டனத்தான் ஏரி வரை முழுமையாக தூா்வாரி விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, திருமணிமுத்தாற்று ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் ஏராளமானோா் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினா்.