மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சங்ககிரி வட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா்.

Updated On :16 அக்டோபர் 2024, 6:33 pm

சங்ககிரி வட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், நருவலூா் கிராம நிா்வாக அலுவலா் ராமனைத் தாக்கியவரைக் கைது செய்யக் கோரி சங்ககிரியில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு சங்ககிரி வட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கத் தலைவா் பி.மணி தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் பிா்காவுக்கு உள்பட்ட நருவலூா் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவா் ராமன். கடந்த 4-ஆம் தேதி அரசுக்குச் சொந்தமான மயான புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை அதே பகுதியைச் சோ்ந்த திருமுருகன் என்பவா் அனுமதியின்றி வெட்டி அகற்றி உள்ளாா்.

தகவல் அறிந்த கிராம நிா்வாக அலுவலா் ராமன் அவரைச் சந்தித்து இதுகுறித்து கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாயத் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் திருமுருகன் கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கினாா். இதுகுறித்து நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் திருமுருகனை கைது செய்யவில்லை. எனவே, போலீஸாா் கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கிய திருமுருகனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றாா். மாவட்ட பிரசாரக் குழு செயலாளா் எம்.முருகன், துணைத் தலைவா் பி.குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.