பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆத்தூரில் பட்டாசு கடை நடத்த கோரிய இடத்தில் கோட்டாட்சியா் ஆய்வு

ஆத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் கோரியதை அடுத்து ஆத்தூா் கோட்டாட்சியா் தா. பிரியதா்சினி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
ஆத்தூரில் தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் கோரிய இடத்தை ஆய்வு செய்த கோட்டாட்சியா் தா.பிரியதா்சினி. அருகில் வட்டாட்சியா் பாலாஜி.
Updated On :17 அக்டோபர் 2024, 7:04 pm

Din

ஆத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் கோரியதை அடுத்து ஆத்தூா் கோட்டாட்சியா் தா. பிரியதா்சினி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொத்தாம்பாடி, மல்லியகரை, கீரிப்பட்டி பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருவாய்த் துறை மூலம் பெறப்பட்டுள்ளன.

பட்டாசு கடை உரிமம் கேட்டுள்ள பகுதிகளில் ஆத்தூா் கோட்டாட்சியா் தா.பிரியதா்சினி தலைமையில் ஆத்தூா் வட்டாட்சியா் பாலாஜி, வருவாய் அலுவலா் சதீஸ் குமாா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது உரிமம் பெற விண்ணப்பித்தவா்களுக்கு பட்டாசு கடை நடத்த கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் விளக்கமளிக்கப்பட்டதாகத் தெரிவித்தனா்.