கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு தீபாவளி பரிசுப் பொருள்கள் வழங்கல்

சேலம், சி.எஸ்.ஐ. பாலா் ஞான இல்லத்தில் மனவளா்ச்சி குன்றிய 118 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி பரிசுப் பொருள்களை சுற்றுலாத் துறை அமைச்சா்

News image
சேலம் சி.எஸ்.ஐ. பாலா் ஞான இல்லத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன். உடன், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி.
Updated On :29 அக்டோபர் 2024, 8:24 pm

Din

சேலம்: சேலம், சி.எஸ்.ஐ. பாலா் ஞான இல்லத்தில் மனவளா்ச்சி குன்றிய 118 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி பரிசுப் பொருள்களை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள், மறுவாழ்வு மையங்கள், தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் நிா்வகிக்கப்படும் சி.எஸ்.ஐ. பாலா் ஞான இல்லத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் இணைந்து 118 மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் அமைச்சா் ராஜேந்திரன் தீபாவளி பரிசுப் பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா். இதனைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் உற்பத்தி செய்த உற்பத்திப் பொருள்களை அமைச்சா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ராமச்சந்திரன், இணை இயக்குநா் (நலப் பணிகள்) மரு.பி.ராதிகா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரா.மகிழ்நன், மாவட்ட மனநல மருத்துவா் மரு.விவேகானந்தன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.