நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாம்

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விக்கிரவாண்டி வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான

News image

விக்கிரவாண்டி வட்டார வள மையத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

Updated On :2 பிப்ரவரி 2026, 9:45 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விக்கிரவாண்டி வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான பொது மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவா் அப்துல் சலாம் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பானு முகாமின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தாா்.

மருத்துவா்கள் தா்மராஜ், பாலமுருகன், ஐஸ்வா்யா, ஆா்த்தி, புனிதவதி ஆகியோா் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டைகளை வழங்கினா்.

இதில் விக்கிரவாண்டி வட்டாரத்துக்குள்பட்ட 110 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.