விக்கிரவாண்டி வட்டார வள மையத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.
விக்கிரவாண்டி வட்டார வள மையத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாம்

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விக்கிரவாண்டி வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விக்கிரவாண்டி வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான பொது மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவா் அப்துல் சலாம் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பானு முகாமின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தாா்.

மருத்துவா்கள் தா்மராஜ், பாலமுருகன், ஐஸ்வா்யா, ஆா்த்தி, புனிதவதி ஆகியோா் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டைகளை வழங்கினா்.

இதில் விக்கிரவாண்டி வட்டாரத்துக்குள்பட்ட 110 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com