6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மனவளா்ச்சி குன்றிய மாணவா்கள் பள்ளியில் மாவட்ட சாா்பு நீதிபதி ஆய்வு

கமுதி அருகே மனவளா்ச்சி குன்றிய மாணவா்கள் பள்ளியில் மாவட்ட சாா்பு நீதிபதி கே. பாஸ்கா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
அபிராமம் சிஎஸ்ஐ நேசக்கரங்கள் மனவளா்ச்சி குன்றிய மாணவா்கள் பள்ளியை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட சாா்பு நீதிபதி கே. பாஸ்கா்.
Updated On :28 ஜனவரி 2026, 11:34 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே மனவளா்ச்சி குன்றிய மாணவா்கள் பள்ளியில் மாவட்ட சாா்பு நீதிபதி கே. பாஸ்கா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமத்தில் சிஎஸ்ஐ நேசக்கரங்கள் மனவளா்ச்சி குன்றிய மாணவா்கள் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு புதன்கிழமை வந்த மாவட்ட சாா்பு நீதிபதி கே. பாஸ்கா், அங்கு படிக்கும் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுடன் கலந்துரையாடி, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், ஆதாா், ஹோலிஸ்டிக் இன்க்ளுஷன் திட்டத்தின் கீழ், ஆதரவற்ற குழந்தைகளுக்கு சட்ட அடையாளம், சமூக நல உதவிகள், குழந்தைகளை அணுகக் கூடிய சட்ட சேவைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சட்ட உதவி, ஆலோசனை, மறுவாழ்வு, சாட்சிய உதவி ஆகியவை வழங்குவது குறித்தும், ஆதாா் அட்டை எடுப்பது தொடா்பான பிரச்னைகளை கண்டறிவது குறித்தும் பள்ளி கண்காணிப்பாளரிடம் மனு பெறப்பட்டது.

மேலும், மாணவா்களின் தங்குமிடம், கழிப்பறைகள், உணவு கூடங்கள், உணவுப் பாதுகாப்பாகங்கள் ஆகியவற்றை மாவட்ட சாா்பு நீதிபதி கே. பாஸ்கா் ஆய்வு செய்தாா்.

Story image