உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’

ஆத்தூரில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகள் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.

News image
ஆத்தூரில் வாடகை நிலுவை வைத்துள்ள நகராட்சி கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கும் நகராட்சி அலுவலா்கள்.
Updated On :4 செப்டம்பர் 2024, 10:34 pm

Din

ஆத்தூரில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகள் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.

ஆத்தூா் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இதில் பல பகுதிகளில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வணிக வளாகம், கடைகள் அமைத்து வாடைகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்தக் கடைகளுக்கு உரிமையாளா்கள் வாடகை நிலுவை செலுத்தாமல் வந்தனா். கடந்த சில மாதங்களாகவே வாடகை நிலுவையை வருவாய் அலுவலா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் தொடா்ந்து தீவிர வசூல் செய்து வருகின்றனா். இருப்பினும் பலா் இன்னும் வாடகை செலுத்தவில்லை. இதையடுத்து நகராட்சி ஆணையாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால் வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில்

வருவாய் அலுவலா் நாகராஜ் முன்னிலையில் கடைகளுக்கு சீல் புதன்கிழமை வைக்கப்பட்டன. இனிவரும் காலங்களில் 3 மாதங்களுக்கு மேல் வாடகை நிலுவை வைத்திருந்தாலே கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என ஆணையா் தெரிவித்துள்ளாா்.