வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

Published on

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கரூா், ஈரோடு, திருப்பூா் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கோவா மாநிலத்தின் மட்கோவன் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். மட்கோவனில் இருந்து 6-ஆம் தேதி 12.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் வழியாக வேளாங்கண்ணிக்கு அடுத்தநாள் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து 7-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கோவா மாநிலம், மட்கோவனுக்கு அடுத்த நாள் இரவு 11 மணிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com