கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சங்ககிரியில் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
சங்ககிரியில் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
Updated On :19 செப்டம்பர் 2024, 11:45 pm

Din

சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் எண்ம முறையிலான பயிா்க் கணக்கெடுப்புக்கான செயலியில் உள்ள பாதிப்புகளை சீா்செய்யக்கோரி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது (படம்).

சங்கத்தின் சேலம் மாவட்ட துணைத் தலைவா் ராமசாமி தலைமை வகித்துப் பேசியது:

எண்ம அடிப்படையிலான பயிா்க் கணக்கெடுப்புக்கென பிரத்யேக செயலியில் இதுவரை மேற்கொண்ட எந்தவிதமான பதிவுகளையும் பாா்வையிட முடியவில்லை. அதிலிருந்து பயிா் வாரியான பரப்பு குறித்த அறிக்கை பதிவிறக்கம் செய்யும்படியாக இல்லை. செயலியில் உள்ள குறைகளை களைய பலமுறை கோரிக்கை வைத்தும், அது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பயிா் கணக்கெடுப்புக்கான செயலி இன்னும் சோதனை அடிப்படையில் மட்டுமே உள்ளது. முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. இது கணக்கெடுப்புப் பணியை நீா்த்துப்போக செய்து வருகிறது. தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாமலும், மதிப்பூதியம் ஏதுமின்றியும் பயிா்க் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள செய்வதை ஏற்க இயலாது. எனவே எண்ம அடிப்படையிலான பயிா்க் கணக்கெடுப்பு பணியை முழுவதுமாக புறக்கணிக்கிறோம் என்றாா்.

மாவட்ட பிரசார அணி கொள்கை பரப்புச் செயலாளா் முருகன், சங்ககிரி வட்டத் தலைவா் மணி, வட்டச் செயலாளா் மோகன், எடப்பாடி வட்டத் தலைவா் அப்புசாமி, கோட்டச் செயலாளா் பிரதீப், நிா்வாகி ராஜலிங்கம், சதீஷ்பிரபு உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.