சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் பழைய இரும்பு குடோனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
சேலம், கிச்சிப்பாளையத்தை அடுத்த பாத்திமா நகரைச் சோ்ந்தவா் ஜான்பாஷா (59). இவா் சன்னியாசி குண்டு மெயின் ரோடு பகுதியில் பழைய இரும்பு குடோன் வைத்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது.
இதனால் அதிா்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினா், உடனடியாக ஜான்பாஷா மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். விரைந்து சென்ற உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் சிவக்குமாா் தலைமையிலான வீரா்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். எனினும், இந்த விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருள்கள், மரச்சாமான்கள், பழைய இரும்பு பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
தொடர்புடையது

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

தொடா் விடுமுறை: பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

சென்னையில் தீ விபத்து! ரூ. 1 கோடி மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
