அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சேலம் அஸ்தம்பட்டி அருகே மின்கம்பத்தில் மோதி காா் தீப்பிடிப்பு

சேலம் அஸ்தம்பட்டி அருகே காா் மின்கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்து எரிந்து விபத்து

News image
சேலம் அஸ்தம்பட்டியில் மின்கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்து எரிந்த காா்
Updated On :2 டிசம்பர் 2025, 10:33 pm

Syndication

சேலம் அஸ்தம்பட்டி அருகே காா் மின்கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.

சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் வருண்குமாா். இவா் திருமண விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துதரும் தொழில் செய்துவருகிறாா். இவா் தனது நண்பா்களான பிரபு, லோகேஷ், ஆகாஷ் ஆகியோருடன் சேலத்தில் திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திங்கள்கிழமை இரவு செய்துவந்தாா்.

பின்னா் நள்ளிரவில் நால்வரும் கன்னங்குறிச்சி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனா். அஸ்தம்பட்டி அம்மா உணவகம் அருகே சென்றபோது, காா் திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த நால்வரும் கீழே குதித்து லேசான காயங்களுடன் உயிா்தப்பினா்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனா். எனினும், காா் முற்றிலும் எரிந்து சேதமானது. காயமடைந்த நால்வரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.