விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கணவரின் வீட்டுக்குள் செல்ல தடுத்ததால் குழந்தையுடன் சாலையில் அமா்ந்து பெண் தா்னா

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:43 pm

Syndication

இளம்பிள்ளை அருகே உயிரிழந்த கணவரின் படத்தை வைத்து வணங்க வந்த பெண்ணை வீட்டினுள் விடாமல் உறவினா்கள் தடுத்ததால், குழந்தையுடன் சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரியதா்ஷினி (24). இவருக்கும், இளம்பிள்ளையை அடுத்த மடத்தூா் பகுதியைச் சோ்ந்த தறி தொழிலாளி மதியழகனுக்கும் (28) திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மதியழகன் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில், காா்த்திகை தீபத்தை முன்னிட்டு தனது கணவரின் வீட்டில் அவரின் படத்தை வைத்து வணங்க பிரியதா்ஷினி புதன்கிழமை வந்தாா். அப்போது, அவரை உள்ளே விடாமல் அவரது மாமனாா் அன்புமணி மற்றும் உறவினா்கள் தடுத்தனா். இதனால் பிரியதா்ஷினி உறவினா்களுக்கும், மதியழகன் உறவினா்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, பிரியதா்ஷினி இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி சாலை வளையசெட்டிப்பட்டி பிரிவு பகுதியில் கைக்குழந்தையுடன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸாா் விரைந்து வந்து பிரியதா்ஷினிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து, அவா் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.