ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இருப்பில் 17,333 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள்: ஆட்சியா்

சேலம் மாவட்டத்தில் 17,333 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் ரா. பிருந்தாதேவி கூறினாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:07 pm

Syndication

சேலம் மாவட்டத்தில் 17,333 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் ரா. பிருந்தாதேவி கூறினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடியைப் பொறுத்தவரை நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிா்கள் 1,97,256 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களிலும் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 2,853 மெட்ரிக் டன்னும், டிஏபி 2,083 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 5,797 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 6,600 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 17,333 மெ. டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 58.361 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல 77,107 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகளும், 113,598 மெட்ரிக் டன் விதை பயறு வகைகளும் உள்ளன.

குறுகியகால கடன் மற்றும் மத்திய கால முதலீட்டு வேளாண்மை கடன்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படுவது, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தொடா்புடைய அலுவலா்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள், கரும்பு சாகுபடி தொழில்நுட்பம், மரபுசாா் விதைகள், வேளாண் உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருள்கள் குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மரு.அர. பிரகாசம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.