தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வனவாசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் திறப்பு விழா

சேலம் ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வனவாசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
சேலம் ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வனவாசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளையை தொடங்கிவைக்கும் ஆவின் பொது மேலாளா் குமரேஸ்வரன். உடன் வங்கி அதிகாரிகள்.
Updated On :22 டிசம்பர் 2025, 7:54 pm

Syndication

சேலம்: சேலம் ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வனவாசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரியும், சேலம் ஆவின் பொது மேலாளருமான குமரேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வனவாசி இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளையை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, நங்கவள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேமா ஏடிஎம் மையத்தை தொடங்கிவைத்தாா்.

மேலும் திறப்பு விழாவில் சேலம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் விக்ரம் சேத் , வனவாசி மேலாளா் தீனதயாளன், வங்கியின் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனா்.