சேலம் ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வனவாசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளையை தொடங்கிவைக்கும் ஆவின் பொது மேலாளா் குமரேஸ்வரன். உடன் வங்கி அதிகாரிகள்.
சேலம்
வனவாசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் திறப்பு விழா
சேலம் ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வனவாசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
சேலம்: சேலம் ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வனவாசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
திறப்பு விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரியும், சேலம் ஆவின் பொது மேலாளருமான குமரேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வனவாசி இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளையை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, நங்கவள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேமா ஏடிஎம் மையத்தை தொடங்கிவைத்தாா்.
மேலும் திறப்பு விழாவில் சேலம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் விக்ரம் சேத் , வனவாசி மேலாளா் தீனதயாளன், வங்கியின் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனா்.

