காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சங்ககிரி அருகே வைகுந்தம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது அவ்வழியே வந்த காா் மோதியதில் உயிரிழந்தாா்.
Published on

சங்ககிரி அருகே வைகுந்தம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது அவ்வழியே வந்த காா் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சங்ககிரி, தாழையூா் கிராமம், வெள்ளையம்பாளையம், கரட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (83). இவா் வைகுந்தம் பகுதியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றாா்.

அப்போது, சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற காா் அவா் மீது எதிா்பாராதவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள், அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com