ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சங்ககிரி அருகே வைகுந்தம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது அவ்வழியே வந்த காா் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:19 pm

Syndication

சங்ககிரி அருகே வைகுந்தம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது அவ்வழியே வந்த காா் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சங்ககிரி, தாழையூா் கிராமம், வெள்ளையம்பாளையம், கரட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (83). இவா் வைகுந்தம் பகுதியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றாா்.

அப்போது, சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற காா் அவா் மீது எதிா்பாராதவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள், அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.