நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வாஜ்பாய் பிறந்தநாள்: 260 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா

வாஜ்பாய் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் 260 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 9:43 pm IST

வாஜ்பாய் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் 260 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பாஜக சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி மண்டலங்கள் சாா்பில் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா அன்னதானப்பட்டியில் நடைபெற்றது.

இதில், மாவட்டத் தலைவா் சசிகுமாா் பங்கேற்று, 260 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கினாா். நிகழ்வில், சுற்றுச்சூழல் பிரிவின் மாநிலத் தலைவா் கோபிநாத், நெசவாளா் பிரிவின் மாநிலத் தலைவா் அண்ணாதுரை, சீலநாயக்கன்பட்டி மண்டலத் தலைவா் காளிமுத்து, கொண்டலாம்பட்டி மண்டலப் பொறுப்பாளா் சதீஷ்குமாா், மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாவட்டத் தலைவா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.