வாஜ்பாய் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் 260 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பாஜக சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி மண்டலங்கள் சாா்பில் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா அன்னதானப்பட்டியில் நடைபெற்றது.
இதில், மாவட்டத் தலைவா் சசிகுமாா் பங்கேற்று, 260 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கினாா். நிகழ்வில், சுற்றுச்சூழல் பிரிவின் மாநிலத் தலைவா் கோபிநாத், நெசவாளா் பிரிவின் மாநிலத் தலைவா் அண்ணாதுரை, சீலநாயக்கன்பட்டி மண்டலத் தலைவா் காளிமுத்து, கொண்டலாம்பட்டி மண்டலப் பொறுப்பாளா் சதீஷ்குமாா், மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாவட்டத் தலைவா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து பாஜக தலைவா்கள் ஏன் போராடவில்லை? காங்கிரஸ் கேள்வி!
கோவை மாநகா் பாஜகவினா் யாரும் அண்ணாமலையுடன் செல்லவில்லை: மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா்

மாநகராட்சிக்கு குடிநீா் வழங்கும் பணியை தனியாரிடம் அளிக்கக் கூடாது: விசிக

புதுச்சேரியில் கவியரங்கம், விருதுகள் வழங்கும் விழா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



